கொழும்பு: கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துக்கும் எமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வஸீம் என்பவர் எனது குடும்பத்துடன் நெருக்கமான ஒருவர். எங்களுடைய பாடசாலை காலத்தில் இருந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் நாங்கள் அவருடைய வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா மற்றும் சகோதர்களுடன் ஒன்றாக உணவு உண்டு ஒன்றாக இருந்துள்ளோம்.
எனவே வஸீம் தாஜுதீனின் மரணத்துக்கும் எமது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.
றக்பி வீரரின் சடலமானது கடந்த 2012 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் சாலிகா விளையாட்டு மைதானத்தை அண்மித்த பிரதேசத்தில் எரிந்த நிலையில் இருந்த கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அது ஒரு விபத்து என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து அவரது ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கமும் செய்யப்பட்டது.
Published by


Leave a comment