காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியாளர் அப்துர் ரஹ்மான் அவர்களை ஆதரித்து வீடு வீடாக மேற்கொள்ளும் பிரச்சாரப் பணிகள் இன்று காத்தான்குடியில் ஆரம்பமானது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் காத்தான்குடிப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் பல பிரிவுகளாகச் சென்று தமது பிரச்சாரப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன்போது வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் கலந்துகொண்டார்.



Leave a comment