சின்னங்களால் உருவாகும் கா(நா)டு

Jungleபிரகாசக்கவி

எனது வீட்டில்
அப்பா
மரத்தை வரைந்தார்
அம்மா
இலையை வரைந்தாள்
அண்ணன்
மயிலை வரைந்தான்
அக்கா
பாம்பு வரைந்தாள்
தம்பி
வண்ணத்துப்பூச்சி வரைந்தான்
தங்கை
குதிரை வரைந்தாள்
நான்
யானை வரைந்தேன்
மனைவி
முயலை வரைந்தாள்
மகன்
மணி அடித்தான்
மகள் கையசைக்க
ஒருவர்
சைக்கிளில் வந்தார்
இன்னொருவர்
வீட்டுக்குள் புகுந்தார்
இவை எல்லாம் சேர்ந்து
திடீரென
இலங்கை பாராளமன்றம் உள்ளே
பெரும் காடு உருவானது
அதைப்பார்த்த அன்னமொன்று
அங்கே நின்று
பாலையும், நீரையும் தரம் பிரிக்குது !

Jungle

 

Published by

Leave a comment