லண்டன்: இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம்கள் இன்று ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாளை மிக மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கொண்டாடுகின்றனர். கோடைகாலத்தில் 19 மணித்தியாலங்கள் வரைக்கும் நோன்பிருந்த அங்குள்ள மக்கள் இன்று காலையிலிருந்து பெருநாள் தொழுகைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகமான இடங்களில் திடல் தொழுகைகளும் நகர் மத்திகளில் உள்ள பள்ளிவாயல்களிலும் தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் இங்கிலாந்தின் ‘ரெடிங்’ நகரில் ‘பால்மர் பார்க்’ திடலில் இன்று காலை பெருநாள் தொழுகை இடம்பெற்றது. அதிகளவான மக்கள் தங்களது குடும்பத்தினருடன் இத்திடல் தொழுகையில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment