திருகோணமலை: திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இம்முறை கடந்த 10.07.2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திரு.ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் செயலக வளாக முன்றலில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், அஷ்ஷெய்ஹ் முஹம்மது முனீர் (நளீமி) நோன்பின் முக்கியத்துவம் மற்றும் சகவாழ்வு எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியதுடன், மூவினங்களையும் சேர்ந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment