– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான இப்தார் நிகழ்வு ஒன்று நேற்று அதன் பிராந்திய தலைமையகமான காத்தான்குடியில் இடம்பெற்றது. NFGGயின் பிராந்திய தலைமைத்துவ சபை உறுப்பினர்களுடன் இணைந்து காத்தான்குடி மகளிர் அணி உறுப்பினர்கள் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த மாபெரும் பெண்களுக்கான இப்தார் நிகழ்விற்கு NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) தலைமை தாங்கி உரையாற்றினார். அத்துடன் NFGGயின் தவிசாலை பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் விஷேட உரை ஒன்றினையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தாய்மார்கள், சகோதரிகள் என பெருமளவிலான பெண்கள் கலந்துகொண்டனர்.
Published by




Leave a comment