400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறப்பு விழா நாளை

Eravur mosqueபழுலுல்லாஹ் பர்ஹான்

ஏறாவூர்: இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய

கட்டமைப்பை மாற்றாமலும் மேலதிக விஸ்தரிப்புடன் ஹிறா பௌண்டேஷடன் நிதியுதவியுடனும் ,இப் பள்ளிநிருவாகத்தினது ஒத்துழைப்புடனும் புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

Eravur mosque

மேற்படி 400 வருடங்கள் பழமைவாய்ந்த இப் பள்ளிவாயளின் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 25-06-2015 நாளை வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

Eravur mosque

இதில் அனைத்து சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு இப் பள்ளிவாயல் நிருவாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Eravur mosque

Published by

Leave a comment