கொழும்பு: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிபடுத்தியுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சரவையில் இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷ, நடைபெறவுள்ள பொதுத் தேரதலிலும் அதே கட்சியின் சார்பாகப் போட்டியிட முயற்சிப்பதாக மஹிந்த வட்டாரத்திலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்வியால் அலரிமாளிகையிலிருந்து வெளியேற்றப்படும்போது…
எனினும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வகிக்கும் நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு ஜனாதிபதி இணங்காவிட்டால் அவர் கட்டாயமாக வேறு வழியை முன்னெடுப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகவே போட்டியிடுவார் எனவும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது முடங்கிப் போயுள்ளது என்றும் மஹிந்தவின் ஊடகத்தரப்பு தெரிவிக்கிறது.
Leave a comment