கொழும்பு: சற்று முன்னர் பொறளை பள்ளிவாயல் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலால் பள்ளிவாயலின் சில கண்ணாடிகள் உடைந்துள்ள நிலையில்,
ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில் அவ்விடத்தில் காணாமல் போன ஆட்டோ ஒன்றை தேடிய குழு ஒன்று பள்ளிவாயல் CCTV வீடியோ ஒளிப்பதிவுகளை கோரியதாகவும், பள்ளி நிர்வாகம் CCTV இயங்கவில்லை என்று சொன்னதாகவும் தெரிகிறது. சற்று நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கற்களை வீசியுள்ளது என தெரிய வருகிறது.
பொறளை பள்ளிவாசல் மீது கல் வீச்சு தாக்குதலை அடுத்து அந்த இடத்துக்கு அவசரமாக முஸ்லிம்களின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் மற்றும் ஆசாத் சாலி, றியாஸ் சாலி ஆகியோர் சென்றுள்ளனர்.
Published by




Leave a comment