கொழும்பு: டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கடந்த வாரம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர். அரசாங்கத்தில் இருந்து விலகி தம்முடன் இணைந்து கொள்ளுமாறு இவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதவிகளில் இருந்து விலகுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தங்களை கொடுக்க முடியும் எனவும் அதனூடாக தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் இவர்கள், சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களிடம் கூறியுள்ளனர். டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய பின்னர் ஒரே ஒரு பேச்சுவார்த்தை கடந்த 25 ஆம் திகதி நடந்துள்ளது.
19 மற்றும் 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே தாம் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையின் போது திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இதனால் மிக நெருக்கடியான நிலையில் இந்த 4 அமைச்சர்களும் இருக்கின்றனர்.
Published by


Leave a reply to nizamhm1944 Cancel reply