காத்தான்குடி: ‘ஃபீல்ட மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு மாநாடு நாளை 08.05.2015 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ப.நோ.கூ.சங்க மாநாட்டு மண்டபத்தில் மாலை 06:30 மணிக்கு மண்டல மத்திய குழுத் தலைவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சகோதரர் ஏ.எம்.ஏ. மிப்ஷி அவர்களின் தலைமையில் இம்மாநாடு நடைபெறும்.
இம்மாநாட்டிற்கு பிரதம அதிதியாக ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயருமான திருமதி சிவகீதா பிரபாகரன், சிறப்பு அதிதியாக கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் காத்தான்குடி ப.நோ.கூ.சங்கத் தலைவருமான சகோதரர் எம்.எஸ்.எம். ஷாபி, கௌரவ அதிதியாக கல்குடாத் தொகுதி அமைப்பாளர் சகோதரர் எம். புகாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இம்மாநாட்டில் ஜனநாயகக் கட்சியின் ஏறாவூர் மண்டல மத்திய குழுவின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.
காத்தான்குடி மண்டல மத்திய குழு நிர்வாகிகள், அங்கத்தவர்களுடன், உள்ளுர் பிரமுகர்கள் பலரும் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டின் ஏற்பாடுகள் யாவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மண்டலப் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
Published by


Leave a comment