முப்பெரும் விழாக்கள் காத்தான்குடி ஹிஸ்புல்லா வளாகத்தில் நடைபெற்றது

student– ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி: பதிய காத்தான்குடி மதரசது பாத்திமதுஸ் ஸஹ்றா மற்றும் ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை ஆகியவற்றின் முப்பெரும் விழாக்கல் காத்தான்குடி ஹிஸ்புல்லா வளாகத்தில் அதன் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி சம்மேளன தலைவர் எம்.ஜ.எம்.சுபைர்CC/JP, பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் DDE/JP, அல்மனார் அறிவியல் கல்லாரி செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி)BA, மௌலவி ஏ.ஜீ.எம்.அமீன்(பலாஹி), மௌலவி எஸ்எம்.எம்.முஸ்தபா(பலாஹி) அதிபர் எஸ்.எல்ஏ.கபுர் Bcom, பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

student

இதன் போது

1.குர்ஆன் மதரசா 19வது வருட பரிசளிப்பு விழா.

2.ஹிஸ்புல்லாஹ் பாலர் அரங்கு திறந்து வைத்தல்

3.O/L பரீட்சையில் அதிக பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவித்தல்.
எனும் முப்பெரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.

kuthubudeen

நிகழ்வில் நிர்வாகத்தினரால் பிரதம அதிதி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை நிர்வாகிகளான எம்.எம்.எம்.குதுபுதீன், எம்.ஜ.எம்.சலீம் என்பவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Published by

Leave a comment