மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இஜ்திமா

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள மாவட்ட இஜ்திமா இன்ஷா அல்லாஹ்  மே மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை ஏறாவூர், அல்-மர்கஸூல் இஸ்லாமி தவ்ஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

மேற்படி மாவட்ட இஜ்திமாவில் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாத் என்போர் யார்? எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் பீ.எம். ஜாபிர் ஷரயியும், தனி மனித வாழ்வில் நல் அமல்கள் ஏற்படுத்தும் தாக்கம் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.செட்.எம். மஸீர் அப்பாஸியும், இயற்கையை அனுபவித்துக்கொண்டு இறைவனை நோக்கி எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம். அர்ஹம் இஹ்ஸானியும் இநவீன மீடியாக்களும் நாமும் எனும் தலைப்பில் ஜனாப் எம். அஸ்மி ஸாலிஹூம் விஷேட சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளனர்.

இதில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுக்கின்றது.

unnamed

Published by

Leave a comment