KCDA யினால் அல்-ஹிதாயாவின் கணித, விஞ்ஞானப் பிரிவுகளுக்கான நிதி கையளிப்பு

unnamedKCDA

மீராவோடை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நான்காம் கட்ட சிறு தொகை நிதி 2015.04.29 ஆந் திகதி புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

இந் நிதியினை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். AL. அபுல் ஹசன் ஆசிரியர் மற்றும் பிரதி அதிபரும், மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டத்தின் தலைவரும், KCDA  யின் தலைவருமான ஜனாப். ஏ.எம். அன்வர் ஆசிரியர் ஆகியோரிடம் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஜனாப். எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் பொருளாளர் ஜனாப். எஸ்.எச்.எம். பயாஸ் ஆகியோர் அதிபர் காரியாலயத்தில் வைத்து கையளித்தனர்.

unnamed

Published by

Leave a comment