பூநொச்சிமுனை: புதிதாக புணர்நிர்மானம் செய்யப்பட்ட காத்தான்குடி பூநொச்சிமுனை ஜூம்ஆ பள்ளிவாயல், ஆயிஷா ஜூம்ஆ பள்ளிவாயல் என்ற பெயரில் ஹிறா பௌண்டேசனின் சர்வதேசத்தக்கு பொறுப்பான அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி)தலைமையில் சவுதி நாட்டின் தனவந்தர் முஹம்மது அஹ்மத் அல்பலாசி,ஹஸன் அஹ்மத் ஹஸன் முஹம்மத் என்பவர்களால் சென்ற 28.04.2015 செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்படடது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஜ.எம்.சுபைர், காத்தான்குடி காழி நீதிபதி மௌலவி ஏ.எம்.அலியார்(பலாஹி), அஷ்ஷெய்ஹ் ஏ.ஜீ.எம்.அமீன்(பலாஹி) உட்பட உலமாக்கள்,பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுமார் 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள மேற்படி பள்ளிவாயல், ஹிறா பௌண்டேசனின் தலைவரும் முன்னால் பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அயராத முயற்சியினால் கட்டபடபட்டுள்ளதாக அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி) தெரிவித்தார்.
Published by




Leave a comment