பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலையை (மியூசியத்தை) பார்வையிட அதிகளவான மக்கள் அங்கு வருகை தருவதால் அதற்கான நேரம் விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்..மேற்படி பூர்வீக நூதனசாலையை (மியூசியத்தை) பார்வையிட வருகை தருவோர் வெள்ளிக்கிழமை தவிர்ந்த விடுமுறை தினங்கள் மற்றும் ஏனைய தினங்களில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை பார்வையிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Published by


Leave a comment