பாலமுனை: தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய பிரச்சார மாநாடு ஒன்று 27 நேற்று திங்கட்கிழமை பாலமுனை அம்மார் ஜூம்ஆ பள்ளிவாயல் அருகாமையில் இடம்பெற்றது. இதன் போது பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோரினால் ‘இறைவனின் இறுதிக்கட்ட விசாரணை’, ‘ஈமானின் உறுதி’ என்ற தலைப்புக்களில் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
இம் மாநாட்டில் உலமாக்கள், பாலமுனை மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேரந்த பெரும்திரளான ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by





Leave a comment