ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் -வீடு வசதியில்லாத 10 குடும்பங்களுக்கு பூநொச்சிமுனை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு

hira foundation– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வசதியில்லாத வறிய குடும்பங்களுக்கு சவூதி அரேபிய நாட்டு அரசின் நிதி உதவியுடன் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேசத்தில் 40 வீடுகளை கொண்ட வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற நிலையில் அதில் பூர்த்தியான 10 வீடுகள் முதற்கட்டமாக அதன் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு 25-04-2015 சனிக்கிழமை காத்தான்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் காரியாலத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வீடு வசதியில்லாத 10 குடும்பங்களுக்கு பூநொச்சிமுனை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான திறப்பை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

hira foundation

இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர்,பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுர்தீன்,ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் நிருவாகிகள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட ஒரு வீட்டுக்கு தலா 8 எட்டு இலட்சம் ரூபாய் செலவுடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment