ஒலுவில்: ‘அகர ஆயுதம்’ அமைப்பு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்த முழுநாள் இலக்கிய நிகழ்வு நேற்று தென்கிழக்கு பல்கலைக் கழக கலை கலாசார பீட மண்டபத்தில் நடைபெற்றது.
தென்கிழக்கு படைப்பிலக்கிய பங்களிப்பு எனும் பெருவெளி கருத்தாடலில் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், மன்சூர் ஏ.காதர், ரீ.எல்.ஜவ்பர்கான், ரியாஸ் குரானா உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.
திறந்த வெளி கவியரங்கில் தமிழ்த்தென்றல் அலிஅக்பர் தலைமையில் கவிஞர்களான பாலமுனை பாறூக், அன்புடீன், மருதநிலா நியாஸ், இறக்காமம் பர்ஸானா, கிரான்குளம் சுரேஸ், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், ரீ.எல்.ஜவ்பர்கான், கிண்ணியா அமீர்அலி, என். நஜ்முல் ஹூஸைன் ஆகியோர் கவிதைபாடினர்.
இங்கு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர்களின் நிகழ்வுகளும் அரங்கேறின.
Published by

Leave a comment