றியாத்: சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட்ட வளைகுடாப் பிரதேசத்தில் சற்று முன்னர் (நேற்றிரவு) மணற்புயல் ஏற்பட்டதால், குறிப்பாக சாரதிகள் பெரிதும் அவஸ்தைக்குள்ளாகினர். கடந்த 3 மாதமாக மத்திய கிழக்கில் நிலைத்திருந்த குளிர் காலநிலை, கடந்த வாரத்திலிருந்து மாற்றம்பெற்றிருந்த இந்நிலையில், திடீரென நேற்றிரவு இத்தகைய மணற்புயல் மத்திய கிழக்கின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றிருந்ததைக் காணமுடிந்தன.
கட்டார் மற்றும் றியாத் ஆகிய பிரதேசங்களில் மணற்புயல் காரணமாக காட்சிகள் மறைக்கப்படும் படங்களை இங்கே காணலாம்.
Published by







Leave a comment