திக்ரித்: ஈராக்கிய படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ள திக்ரித் நகருக்கு அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி வருகைத் தந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் வசமிருந்த இந்த நகரை அரச படையினர் மீளக் கைப்பற்றியுள்ளனர்.
திக்ரித் நகர் மீளக் கைப்பற்றப்பட்டமையானது மிகப் பெரிய வெற்றி என ஈராக்கிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் சொந்த ஊரான திக்ரித்தை இஸ்லாமிய அரசு படையினரிடமிருந்து மீட்பதற்கு மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
Published by


Leave a comment