கொடுத்த வாக்குறுதியைப் பேணாது ஏமாற்றினார் ஹிஸ்புல்லாஹ்! உலமாக்கள் ஏமாற்றம்!!

NTJ Special Bayan– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் உருவச் சிலைகளையும், பொம்மைகளையும் வைப்பது தொடர்பாக, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தனது செயற்பாட்டிற்கான மார்க்க ரீதியான ஆதாரங்களையும், காரணங்களையும் விளக்குவதாக கடந்த 27ம் திகதி வெள்ளிக்கிழமை அந்த அமைப்பின் உலமாக்களிடம் வாக்குறுதியளித்திருந்த
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,

முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இன்று தனது வாக்குறுதியை அப்பட்டமாக மீறியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

30ம் திகதி திங்கட்கிழமை இச்சந்திப்பை மேற்கொள்வதாக அவர் வாக்குறுதியளித்திருந்த போதிலும்,நேற்று செவ்வாய்க்கிழமையும் அவரது சந்திப்புக்காக இரவு 10:00 மணிவரை காத்திருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்கள், இதன் பிறகு அவருடன் இவ்விவகாரம் தொடர்பான சந்திப்பில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்துடன் கலைந்தனர்.

NTJ Special Bayan

இதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற ஜும்ஆவின்போது மக்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டவாறு, நாளை (01.04.2015) புதன்கிழமை இரவு 08:00 மணிக்கு புதிய காத்தான்குடி மீன்பிடிஇலாகா வீதியிலுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ‘இஸ்லாமிய நூதனசாலையில் உருவச் சிலைகள் மற்றும் பொம்மைகள் வைக்கலாமா?’ எனும் தலைப்பில் விஷேட மார்க்க விளக்க நிகழ்ச்சியொன்றும் வீடியோ காட்சிகளுடன் நடைபெறவுள்ளது

hizbullah (3)

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரசாரகர் மௌலவி எம்.சீ.எம். ஸஹ்றான் (மஸ்ஊதி) இந்நிகழ்வில் விளக்கவுரை ஆற்றுவதோடு, மேற்படி தலைப்பிலான நூல் வெளியீடொன்றும் அங்கு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Published by

Leave a comment