காத்தான்குடி: சிறி லங்கா ஹிறா பௌண்டேசன் ஏற்பாட்டினில் சிறிலங்கா ஜம் இய்யத்துஸ்ஷபாப் மற்றும் சர்வதேச அல்பஷர் பெண்டேசன் இணைந்து நடாத்தும் கண் சத்திர சிகிச்சை முகாம் 01.04.2015 புதன்கிழமை இடம் பெற இருப்பதனை முன்னிட்டு காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.
இடம் பெற உள்ள கண் சிகிச்சை முகாமிற்கு என 85 நோயாளர்கள் பதிவு செய்துள்ளதாகவும்; இம்முகாமில் நோயாளர்களை கவனிக்கவென விசேட உள்ளுர் தொண்டர் படை அணி தயாராக இருப்பதாகவும் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.
Published by




Leave a comment