சிட்னி: உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 2வது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கனக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற இருக்கும் இப்போட்டியில், சாதனைகள் இடம்பெறலாம் என உலக கிரிக்கெட் பிரபலங்களால் எதிபார்க்கப்படுகிறது.
Published by


Leave a comment