காத்தான்குடி: எனது பெயரைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முகநூல் பக்கங்கள் தொடர்பாக நான் அறிகிறேன். முகநூல் பக்கங்கள் எதனையும் நான் எனது சொந்தப் பெயரிலோ அல்லது வேறு புனைப் பெயர்களிலோ இற்றைவரை பாவிக்காத நிலையில் எனது பெயருக்கு களங்கம் உருவாக்குவதற்காகவே சில விசமிகள் இந்த கீழ்த்தரமான செயலை செய்திருப்பதாகவும் நான் நம்புகின்றேன்.
மேலும், இந்த முகநூல் பக்கங்களை பயன்படுத்தி, பல கீழ்த்தரமான கருத்துக்களை சில ஊடகவியலாளர்களுக்கு எதிராக எழுதி என்னை வேண்டுமென்றே பிரச்சினைகளில் மாட்டிவிடுவதற்காக இந்த விசமிகள் முயற்சித்திருப்பதாகவும் அறிகிறேன்.
இதற்கு முன்னரும் போலியான முகநூல் பங்கங்களைத் திறந்து எனக்கெதிரான கருத்துக்களை இந்த விசமிகள் எழுதி வந்தார்கள் என்பதனையும் நான் அறிவேன்.
ஐ.தே.கட்சியின் நடவடிக்கைகளை காத்தான்குடிப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக முன்னின்று மேற்கொண்டு வரும் நான் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நமது மக்களுக்குத் தேவையான பல விடயங்களை நிறைவு செய்வதற்காக முன்னின்று பாடுபட்டு வருகிறேன். எனது முயற்சிகள் பல இதுவரை வெற்றியும் அளித்திருக்கின்றன.
இதனை சகித்துக் கொள்ள முடியாத, எனது அரசியல் முன்னேற்றத்தில் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில விசமிகளே இந்த கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை நான் உடனடியாக மேற்கொள்ளவுள்ளேன்.
எனவே, எனது பெயரில் இயக்கப்படும் எந்த முகநூல் பக்கங்கள் எதையும் எனக்கு உரியவை அல்ல என்பதனை பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த விசமிகளின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, என்னோடு தொடர்புபட்ட எந்த விடயங்கள் தொடர்பாகவும் நேரடியாக என்னோடு தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களையும் ஊடகவியலாளர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வண்ணம்
முஹம்மட் முஸ்தபா
அமைப்பாளர், ஐ.தே.கட்சி,
காத்தான்குடி.
Published by

Leave a reply to புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ் Cancel reply