ஆபிரிக்காவில் அல்-கிம்மா

al hikma (2)– எம்.ரீ.எம்.பாரிஸ்

கல்குடா: கல்குடா அல்-கிம்மா நிறுவனமானது, இலங்கையின் பல பகுதிகளிலும் தங்களது அபிவிருத்திப்பணிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடரில், தங்களது சேவையினை இலங்கை மற்றுமன்றி இந்தியா, ஆபிரிகா போன்ற நாடுகளிலும் மேற்கொள்வதற்கான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் ஆபிரிகாவின், எதியோபிய நாட்டில் இருக்கக்கூடிய, குடிநீர் தேவையுடையவர்களுக்கு கிணறுகள் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

al hikma (2)

இதன் பயனாக, இன்று 16.03.2015 திங்கட்கிழமை எதியோபியாவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு அல்-கிம்மா நிறுவனத்தினால் குடிநீர்க்கிணறு நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மேலும் பல குடும்பங்களும் பயனடையும் வகையில், வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

al hikma

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதியளவில் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் இந்தியா சென்று, அல்-கிம்மாவின் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து ஆராயவுள்ளதுடன், முதற்கட்டமாக குடிநீர் கிணறு ஒன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment