போலி வீஸா மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற மூவர் கைது
கொழும்பு: போலி விசாக்களை பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே இந்த மூவரையும் 11 ஆம் திகதி கைது செய்துள்ளதாக விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் 21, 25 மற்றும் 32 வயது இளைஞர்கள் என்றும் அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்விளைஞர்களில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இலங்கை ‘இமிகிரேசன்’: ஆவணப்படம்
நண்பரினால் தயாரித்து கொடுக்கப்பட்ட போலியான ஆவணங்கள் மற்றும் விசாவை பயன்படுத்தியே இம்மூவரும் பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முயன்றதாக தெரியவருகின்றது.
Leave a comment