“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புத்திசாலித்தனமான முடிவு இன ஐக்கியத்தை வலுப்படுத்துகின்றது”: SLMC

slmc_tna_logo[1]கொழும்பு: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புத்திசாலித்தனமான முடிவு இன ஐக்கியத்தை வலுப்படுத்துகின்றது என முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.இக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதில் இருந்த இழுபறி நிலைமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமயோசிதமாக அரசியல் அனுபவத்தின் புத்திசாலித்தனத்துடன் எடுத்த முடிவு கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் இன ஐக்கியத்தை வலுப்படுத்த உதவியுள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு குறித்து மாகாணத்தில் வாழும் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இனமுறுகல் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரியான தருணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அக்குழு பாராட்டியுள்ளது.

மேலும் த.தே.கூ தலைவரினால் எடுக்கப்பட்ட முடிவு துணிச்சலும், அரசியல் புத்திசாதூர்யமும் மிக்கதுடன், இரு இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment