ரியாத்: ரியாத்தில் இடம்பெற்ற கிங் பைசல் விருது வழங்கும் விழாவில் சவூதி மன்னர் சல்மான் இப்னு அஜிஸ் அவர்களினால் இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இதன் போது 24 கரட் கொண்ட 200 கிராம் தங்க பதக்கம், மற்றும் 750,000 சவூதி ரியால்கள் (இந்திய மதிப்பில் ஒரு கோடி 21 லட்சம் ) மற்றும் அரபி மொழியில் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.
டாக்டர் ஜாகிர் நாயக் ((Islamic Research Foundation) இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி முஸ்லிம்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் மாபெரும் பணியை செய்து வருகிறார்.
Peace TV யை நிறுவி அதன் மூலம் உலக முழுக்க இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும்படியும் சேவை செய்து வருகிறார்.
இவர் தான் பெற்ற ஒரு கோடி 21 லட்சம் 50 ஆயிரம் Peace TV க்கு வக்பு சொத்தாக அன்பளிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment