நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பாலமுனைக் கிராமத்திற்கான கிராம மட்டக் குழு நியமனம்

unnamedஊடகப்பிரிவு NFGG

பாலமுனை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பாலமுனைக் கிராமத்திற்கான கிராம மட்டக் குழுவினைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் (01.03.2015) ஞாயிற்றுக்கிழமை பாலமுனை கிராம அவிபிருத்திச் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.

NFGGயின் செயற்குழு உறுப்பினர் R. ஜவாத் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படிக் கூட்டத்தில் NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM. மிஹ்ழார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் NFGGயின் கிராம மட்டக் குழுக்களை நிறுவுதல் தேசிய வேலைத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது 16 பேர் கொண்ட பாலமுனைக் கிராமத்திற்கான கிராம மட்டக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

இக்குழுவானது எதிர்காலத்தில் NFGGயின் அரசியல் மற்றும் சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed1

unnamed

Published by

Leave a comment