காத்தான்குடி: காத்தான்குடியில் வறுமைக் கோட்டின் கீழுள்ள ஏழு குடும்பங்களுக்கு பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் வாமி நிறுவனத்தின் அனுசரணையுடன் குழாய்க்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.தலா ஒரு குடும்பத்திற்கு 26000 ரூபா செலவில் குழாய்க்கிணறு மற்றும் மோட்டார் பம்பிகளுடன் இந்தக் குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.
இவ்வாறு நிர்மானிக்கப்பட்டுள்ள குழாய்க்கிணற்றினை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா பார்வையிட்டதுடன் பயணாளிகளிடம் அதனை நேற்று (25.2.2015) பிற்பகல் கையளித்தார்.
Published by



Leave a comment