”இனியும் வெல்லுவாரு எப்படி என்று மேடையில் சொல்லுவாரு”

Basheer%20Sekudavuth_CI[1]ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

ஏறாவூர்: ”இனியும் வெல்லுவாரு எப்படி என்று மேடையில் சொல்லுவாரு” இவ்வாறு வசனங்கள் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரமொன்று முன்னால் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத்துக்கு ஆதரவாக மட்டக்களப்பு பிரதேசங்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

மேலும் அத்துண்டு பிரசுரத்தில் குறிப்படப்பட்டுள்ளதாவது,

ஏராவூரில் றூபி மொஹைதீன் மாதிரிக் கிராமம் நாளை மாலை ஞாயிறுக்கிழமை (22.02.2014) திறக்கடுவதனை முன்னிட்டு இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தற்போதைய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளர் பசீர் சேகுதாவூத் வருக்கின்ற பொதுத்தேர்தலில் தான் எவ்வாறு வெற்றியடைய போகின்றேன் என்பதனை பற்றி பொது மக்களுக்கு பகிரங்கமாக உரையாற்றவுள்ளார் என அத்துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள்மையினை முக்கியமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

unnamed

Published by

One response to “”இனியும் வெல்லுவாரு எப்படி என்று மேடையில் சொல்லுவாரு””

  1. போஸ்டர் அரசியல்,புரியாத வசனம்,மக்களுக்கு மட்டும் உதவாத பதவி,வேலையில்லா அமைச்சு,தான்மட்டும் சுருட்டும் எண்ணம், இவற்றின் மொத்த உருவம் எங்கள் பஸீர் அவர்கள்

Leave a reply to alif Cancel reply