ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திவிருந்த ஊடக செயலமர்வு பிற்போடப்பட்டுள்ளது

SLMMFSLMMF

கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் எதிர்வரும் 14ஆம் (14.02.2015) திகதி கொழும்பில் நடாத்திவிருந்த ஊடக செயலமர்வு தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு, எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செயலமர்வுக்கு 50 பேர் மாத்திரமே சேர்த்துக்கொள்ளப்படுவர். எனினும், அதிகளவான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால், ஏற்பாட்டுக் குழுவினர் அவற்றை பரீசிலித்து செயலமர்வில் பங்குபற்றுபவர்களை தீர்மானிப்பார்கள்.

இதில் தெரிவு செய்யப்படுவோருக்கு ஊடக செயலமர்வு நடைபெறும் திகதி, இடம் என்பன குறித்து அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்படும். அத்துடன் ஏற்கனவே அறிவித்தபடி ஊடக செயலமர்வில் கலந்துகொள்வோருக்கு போக்குவரத்துக் கட்டணம், உணவு மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்படும்.

ஏற்பாட்டுக்குழு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

Published by

Leave a comment