காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 25-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் மோசடிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் காடைத்தனம் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்த முழுமையான கருத்துக்களும் ஊடகவியலாளர்களின் கேள்வி பதிலும் இத்துடன் ஓடியோ வடிவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழுலுல் ஹக், அஷ்ஷெய்க் சபீல் நளீமி ஆகியோர் கலந்து கொண்டனர்
குறித்த ஒலிப்பதிவு எமது இணையத்தள வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment