ஒற்றையாட்சிக்குள்ளேயே தேசிய பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் ரணில் தெரிவிப்பு

RanilWickramasinghe[1]கொழும்பு: இலங்­கையின் தேசிய பிரச்­சி­னைக்கு இந்தப் பாராளுமன்றத்திற்குள் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே தீர்வு காணப்­படும். 13 ஆவது திருத்­தமும் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே உள்ளடக் கப்பட்டிருக்கின்றது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று செவ்வாய்க்­கி­ழமை சபையில் தெரி­வித்தார்.

18ஆவது திருத்தம் நீக்­கப்­பட்டு 19ஆவது திருத்தம் ஊடாக மீண்டும் சுயா­தீன ஆணைக்குழுக்கள் கொண்டு வரப்­ப­டு­வ­தோடு நிறை­வேற்று அதி­கா­ரத்தின் ஏக­போக அதிகா­ரங்­களும் குறைக்­கப்­படும் என்றும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்தின் முத­லா­வது கன்னி பாரா­ளு­மன்ற அமர்வு நேற்று இடம்­பெற்­றது. இங்கு புதிய அரசின் கொள்­கை­களை விளக்கி உரையாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் பிர­தமர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் நாம் இலங்­கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்­கிறோம். அதற்­குள்­ளேயே 13 ஆவது திருத்­தமும் உள்ளடக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே இனியும் காலம் தாழ்த்­தாது தமிழ் தேசிய கட்டமைப்பு மற்றும் சுதந்­திரக் கட்சி உட்­பட பல்­வேறு அர­சியல் கட்­சி­க­ளுடன் பேச்சு வார்த்­தை­களை நடத்தி தேசிய பிரச்­சி­னைக்கு தீர்க்­க­மான தீர்வை காண வேண்டும்.

சிங்­கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்­களும் ஒற்­று­மை­யாக இணைந்து அனை­வரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நாம் காண­வேண்டும். எனவே தான் விமல் வீர­வன்ச எம்.பிக்கு ஒன்றைக் கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன். நீங்கள் தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிழை­யான வழியில் வழி­ந­டத்­தி­னீர்கள். அதனால் தான் மஹிந்த தோல்வி கண்டார்.

எனவே மீண்டும் நாட்டில் இன­வா­தத்தை தூண்ட முயற்­சிக்க வேண்டாம் என விமல் வீரவன்ச எம்.பியை கேட்டுக் கொள்­கிறேன். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமையில் நாம் முன்வைத்த 100 நாள் வேலைத்­திட்­டத்தில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமையில் திருத்­தங்­களை கொண்டு வந்து பாராளுமன்றத்திற்கும் நீதி­மன்­றத்­திற்கும் பதில் கூறும் ஜனா­தி­பதி முறை­மையை உருவாக்­குவோம்.

17 ஆவது திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து 18 ஆவது திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. தன்னிச்சையான ஏக­போக அதி­காரம் கொண்ட 18 ஆவது திருத்­தத்தை இல்லாதொழிப்போம். அத்துடன் கண்­கா­ணிப்பு குழுக்­களை அமைப்போம். பாராளுமன்றத்தின் அதி­கா­ரங்கள் பாதுகாப்போம். எதிர்­வரும் நாட்­களில் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களின் நேரடி ஒளி­ப­ரப்பு மீண்டும் ஆரம்­பிக்­கப்­படும்.

எதிர்­வரும் 29 ஆம் திகதி சபையில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள இடைக்­கால வரவு செலவுத் திட்­டத்தில் மக்­க­ளுக்கு பெரும்­பா­லான சலு­கை­களை வழங்கி வாழ்க்கை செலவை குறைப்போம். கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் பேசி இது தொடர்பில் விவாதம் நடத்த முடியும். ஊழல் மோச­டி­களை தடுப்­ப­தற்கு புதிய திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.

அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படும். பாரா­ளு­மன்றம் சம்­பி­ர­தாய பூர்வமாக கூடும் இடம் என்­பதை மாற்­றி­ய­மைத்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்கள் வழங்கி பலப்படுத்தப்படுத்துவோம்.

தெற்­கா­சி­யாவில் புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்­திற்கு நாம் அடித்­த­ள­மிட்­டுள்ளோம். 100 நாள் திட்­டத்­திற்கு மக்கள் ஆணை கிடைத்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவுக்கு இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியும் கிடைத்துள்ளது.

எதிர்க்­கட்­சிகள் ஆளும் கட்­சிகள் என்றும் கட்சி பேதங்­களை மறந்து ஒன்­று­பட்டு நாம் செயற்­பட வேண்டும். எமது இலக்கு நல்­லாட்­சி­யா­கவே இருக்க வேண்டும். அத்­தோடு 19 திருத்த சட்ட மூலத்தை கொண்டு வந்து நிறை­வேற்­றுவோம். இது மக்­களின் உரிமையாகும்.

நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பல்­வேறு சட்டப் பிரே­ர­ணைகள் பாராளுமன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரப்­படும். எதிர் கட்­சி­க­ளுடன் இவை தொடர்­பாக விவாதிப்போம். அதன் போது உங்­க­ளது ஆக்­க­பூர்­வ­மான திருத்­தங்­களை நாங்கள் எதிர்பார்க்­கின்றோம்.

கடந்த காலங்­களில் பாரா­ளு­மன்­றத்தின் கௌரவம், அதி­கா­ரங்கள் செய­லி­ழக்கச் செய்யப்பட்டிருந்தன. அதனை மீண்டும் உயிர்ப்பித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம். குடும்ப ஆட்சிக்கு பதிலாக மக்களாட்சி உறுதிசெய்யப்படும். எமது கட்சிககள் தனிப்பட்ட கொள்கைகள் வெவ்வேறு இலக்குகள் சிந்தனைகளை கொண்டிருந்தபோதும் பொதுவான வேலைத் திட்டத்திற்காக கைகோர்த்தோம். எனவே ஒற்றுமையுடன் இணைந்து தீர்மானம் எடுத்து ஆட்சியை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Published by

One response to “ஒற்றையாட்சிக்குள்ளேயே தேசிய பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் ரணில் தெரிவிப்பு”

  1. Its a period to action! Please find solutions to the minority issue.

    Also reduce the cost of living,confirm the equal rights all communities, eliminate all discrepancies to maintain peace, prosperity, unity and patriotism!

    Put a big stop to all sort of corruptions,irregularities, wastages of state wealth, reduce expenditures of the Ministers and Ministries!

    Intrduce a Code of Descipline to MPP!

Leave a comment