தன் வினை தன்னைச் சுடும்

1354122134_mahinda.rajapaksa[1]கொழும்பு: மகிந்த ராஜபக்ஷ தனது பலமிக்க அரசியல் எதிரியான முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் சட்டத்தின்படி வருடாந்தம் ஒதுக்கப்படும் 27 கோடி ரூபா நிதியை கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 6 கோடி ரூபாவாக குறைத்தார். நிதியை குறைத்து சந்திரிக்காவுக்கு மனவலியை ஏற்படுத்தி விட்டு, தனது ஒரு நாள் செலவுக்கு 2.5 கோடி ரூபாவை ஒதுக்கினார்.

வரவு செலவுத் திட்டம் கொண்டு வரப்பட்டு இரண்டு மாதங்கள் மாத்திரமே கடந்தது. மகிந்த ராஜபக்ஷவு ஜனாதிபதி பதவியை இழந்தார். ஒரு நாளைக்கு 2.5 கோடி ரூபாவை செலவு செய்த அவருக்கு தற்போது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் வருடத்திற்கு 6 கோடி ரூபா மாத்திரமே கிடைக்கும்.

Chandrika9.img_assist_custom[1]

மகிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு குழியை வெட்டினார். ஆனால் அதில் மகிந்தவே விழுந்து விட்டார். தலைவிதி இப்படித்தான் தண்டனை வழங்கும்.

Published by

Leave a comment