மஹிந்த ராஜபக்ஸ வெளியேறவில்லை: வெளியேற்றப்பட்டார்

mahinda– AK-77

கொழும்பு: நேற்று வெளியாகிக்கொண்டிருந்த தேர்தல் முடிவுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்வி உறுதியாகிவிட்டதை தாங்க முடியாமல், மஹிந்த தரப்பினர் இராணுவத்தை வைத்து தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தை இராணுவத்தைக்கொண்டு தாக்கி, பெறுபேறுகளை இடைநிறுத்தி, ஓர் புரட்சியை மேற்கொள்ள திட்டம் வகுத்திருந்தது.

இத்திட்டம் எதிர்தரப்பினருக்கு உடன் தெரியக் கிடைக்கவே, ரணில் விக்ரம சிங்க தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவைத் தொடர்பு கொண்டு இவ்விடயத்தைக் கூறினார். இவ்விடயம் தேர்தல் ஆணையாளர் ஊடாக பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தேர்தல் வெளியீடுகளில் தனது வெற்றிகளை முதலில் வெளியிட வேண்டும் எனவும் மஹிந்த தேர்தல் ஆணையாளருக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். இதன் காரணமாகவே சுமார் ஒரு மணித்தியாலங்கள் தேர்தல் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு, மஹிந்த வெற்றிபெற்ற தொகுதிகள் வரிசைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்தன.

ஆனாலும் பின்னர் தனது தோல்வி உறுதியாகிவிட்டதை தாங்க முடியாமல் இத்திட்டத்தை மஹிந்த நடாத்த இருந்தார்.

ஆனால் உடனடியாக அமெரிக்க மற்றும் இந்தியாவுக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மஹிந்தவை மேற்படி இருநாட்டு முக்கியஸ்தர்கள் தொடர்புகொண்டு, இத்திட்டத்தைக் கைவிடுமாறு கேட்டிருந்தனர்.

எனது தோல்வி எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என தனது நிலைமையை குறித்த அதிகாரிகளிடம் மஹிந்த எடுத்துக்கூறவே, ரணில் உடனடியாக அலரி மாளிகைக்கு அதிகாலையில் இரகசியமாக அனுப்பப்பட்டார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற மேற்படி இரகசிய பேச்சுவார்த்தையின்படி மஹிந்த அலரி மாளிகையைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும், தேர்தல் வெளியீடைக் குழப்பும் திட்டம் நிறுத்தப்பட வேண்டும். இராணு நடவடிக்கைகள் கைவிடப்படல் வேண்டும், மஹிந்தவுக்கும் அவரது குடும்பத்துக்குமான பாதுகாப்பை அவரது சொந்த ஊர் செல்லும் வரையில் உறுதியளித்தல் போன்ற பேச்சுக்கள் இடம்பெற்றன.

இதனடிப்படையிலேயே மஹிந்த அலரிமாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் தானாகவே அவர் வெளியேறவில்லை என்ற உண்மை தற்பொழுது தெரிய வந்துள்ளது.

அண்மைக்காலமாக மஹிந்தவின் திட்டங்கள் அனைத்தும்தவறி வீழ்த்தப்படுவதும், அவரது திட்டங்கள் அடுத்த நிமிடம் எதிர்க்கட்சிகளுக்கு போய்ச் சேர்வதும் மஹிந்தவின் கடந்தகால ஆட்சிப் பலவீனத்துக்கான அடிப்படைக் காரணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

One response to “மஹிந்த ராஜபக்ஸ வெளியேறவில்லை: வெளியேற்றப்பட்டார்”

  1. மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் சிரிப்பதுண்டு பாவம் மனிதனென்று!

    அவனே ஆட்சியில் அமர்த்துகின்றான். அதிலிருந்து இறக்கவும் செய்கின்றான். அவனே சிரிக்கவும் அழவும் வைக்கின்றான். அவன் பதவிகளை உயர்த்துபவன் என்பதையும் மறந்துவிடலாகாது! அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் எ்னபதுவும் இறைநியதியே!

    இவ்வுண்மைகளை மனிதன் அறிந்திருந்தால் அனைத்தையும் அவை எவ்வாறு வருகின்றனவோ, அவ்வாறே ஏற்று மிகவும் மகிழ்ச்சியுடன், மனநிம்மதியுடன் வாழ முடிவதுடன், மற்றவர்களால் கௌரவிக்கப்படவும் செய்வான்! இன்றேல், இழிநிலையை எய்த வேண்டியே வருகின்றது!

    அதிகாரங்கள் மக்களால் அளிக்கப்படுவது, அம்மக்களை சீரிய முறையில், அரசியல் அமைப்பின்படி நி்ர்வகித்து, அவர்களது வளங்களை உரிய முறையில், ஊழலற்று பிரயோகித்து, மக்களை அச்சமின்றி, அமைதியாக, இயல்பு வாழ்க்கை வாழ வைப்பதற்காகவே என்பதை ஆட்சியாளர் மறந்துவிடுகின்றனர்.

    தடி கிடைத்துவிட்டால் தண்டல்காரராகிவிடுவது என்ற மமதையில் ஆட்சி நடத்த முற்படும் போது, அவர்க்ள் தற்போதைய இழிநிலையையே அடைய வேண்டி வரும்! இவை இறை நியதி! ஆட்சியாளர் இதனை மறந்துவிடலாகாது!

Leave a reply to nizamhm1944 Cancel reply