என்னதான் செய்யவில்லை…..?

 

431771_338641692846029_829495749_n

 

 

 

 

கோடிகோடி செலவு செய்து
காத்த மண்ணை கண்கவரும்
பூமியாக மாற்றி வரும்
மண்ணின் மைந்தனவன்
தேர்தல்மேடைக் கேள்விகளுக்கு
வக்கிருந்தால் விடையளிங்கள்..?மேடைமேடையாக மேலேறி
தொண்டைகிழிந்து அந்தரத்தில்
தொங்கும் நிலையில் கத்துகின்ற
அரசியல் அறிவாளிகளே
இதற்கும் விடையளிங்கள்

ஊழல் ஊழல் என்று
ஊர் முழுக்க கொக்கரிக்கும்
உய்த்தறியும் கூட்டத்தாரே
ஆதாரங்கள் இருக்குமென்றால்
அள்ளிப் போடுங்களேன்
நாங்களும் பார்ப்பதற்கு!

காத்தமண்ணில் கீழ்த்தரமாய்
விமர்சித்து உரையாற்றும்
அசலூரான் பேச்சுக்கு
கைதட்டும் கனவான்களே
வெட்கித் தலைகுணிங்கள்

தலைவனவன் வார்த்தைக்கு
கட்டுண்டு வாக்களித்த
மக்களை மடையராக்கி
மாற்றணியில் சேருவதா
மார்க்கம் என சொல்லுங்கள்?

காத்தமண்ணின் காவலனாய்
பல்லாண்டு பணியாற்றி
சேவை மழை பொழியும்
சேவகனைப் பார்த்து நீங்கள்
என்ன செய்தாய் என்கிறீரே
நன்றி கெட்ட ஜென்மங்களே

யாருக்கும் வாக்களிக்கும்
உரிமைகள் உண்டெல்லோர்கும்
வேட்பாளர் கொள்கைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு
தனிமனித குறைதேடும்
அரசியலைக் கைவிடுங்கள்

காலங்காலமாக காத்தமண்ணில்
அபிவிருத்திப் பணிபுரியும்
அரசியல் வாதி கண்டு
அகம்வெந்து புழுங்கும் நீங்கள்
அம்மண்ணுக்கு செய்ததென்ன?

கால் நூற்றாண்டு காலமாக
ஏசுவதும் தூற்றுவதும் தவிர
எம்மவரை குழப்புவதை தவிர
முட்டுக்கட்டை போடுவது தவிர
நீங்கள் செய்த சேவை என்ன?

கொள்கைகள் ஏதுமின்றி
கூட்டணிகள் அமைத்திருக்கும்
காத்தமண்ணின் கனவான்களே
ஊருக்கும் சமூகத்திற்கும்
நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

பொறாமையெனும் திரை விலக்கி
நடு நிலைமை மனதில் வைத்து
மனசாட்சியில் கை வைத்து
கல்புக்குள் கேளுங்கள்
காத்தமண்ணுக்கு ஹிஸ்புல்லா
என்ன செய்யவில்லை என்று!

‘காத்தவூரான்’

Published by

One response to “என்னதான் செய்யவில்லை…..?”

  1. Ada naaththa naa_e, evvalavu panam vaanginaay, intha mokka kavithaiii eluthuvatharku,

    kodi kodi onga wappavaa koduththathu

    ellaththirkum commision, commision il ooriya udampu, sorkam haraam endru sollu unathu raajaavitrku

Leave a reply to Pukka Sahib Cancel reply