-டீன் பைரூஸ்-
காத்தான்குடி;புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 600 மேற்பட்ட ஏழை மாணவ,மாணவிகளுக்கான இலவச கைப்பை,அப்பியாச புத்தகங்கள்,பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (01.01.2015 வியாழக்கிழமை) அன்வர் வித்தியாலயத்தில் கேட்போர் மண்டபத்தில் நடை பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எம்.நியாஸ் தலைமையில் நடை பெற்ற மேற்படி நிகழ்விற்கு பிரதமஅதிதயாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டு உரையாற்றுகையில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந் ராஜபக்சவிற்கு வாக்களிப்பதன் மூலம் நன்றி உள்ள சமூகமாக நாம் இருக்க வேண்டும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வினில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,ஆசிரியாகள், மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Leave a comment