“இடி அமீனைப் போல் ஆட்சி நடத்தும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும்”: மைத்திரிபால

maithiriகொழும்பு: “இடி அமீனைப் போல் ஆட்சி நடத்தும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்று இப்பொழுது நாட்டு மக்கள் கங்கணம் கட்டியுள்ளனர். அதற்கான சிறந்த சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற ஆட்சியை தலைகீழாக மாற்றியவர் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மகிந்தவின் ஆட்சியை ஒழித்து மலரவுள்ள எமது அரசில் நீதித்துறையை வலுப்படுத்தி சிறந்ததொரு அரச கட்டமைப்பை உருவாக்குவோம்.

விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

தொழிலில்லாத பத்து லட்சம் பேருக்குத் தொழில்வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

நான் ஒரு விவசாயப் பின்னணியைக் கொண்டவன் என்கின்ற அடிப்படையிலே எனது அரசு விவசாயிகளின் அரசாக இருக்கும்.

மீனவர்களின் நலன்களும் பேணப்படும்.

இது பொதுமக்களின் அரசு.

எனது அரசு தனிக் குடும்ப அரசாக இருக்காது.

நான் மகிந்த ராஜபக்‌ச போன்று மன்னராட்சி செலுத்த மாட்டேன்.

அவர் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களைக் கொண்டு மாடமாளிகைகளைக் கட்டியிருக்கின்றார்.

ராஜபக்‌சவின் குடும்பம் மன்னர்களின் குடும்பங்களைப் போன்று உல்லாசமாக வாழ்கிறது.

இது சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் நாடு. இன, மத, மொழி வேறுபாடுகளின்றி இந்த நாட்டை ஆள்வோம்.

எல்லோரும் தாம் விரும்பும் மதத்தை அனுசரித்துக் கொண்டு ஐக்கியமாக வாழ முடியும்.

துஷ்பிரயோகம் செய்கின்ற மகிந்தவுக்கு வாக்களிக்காமல் சிறந்த முறையில் மக்களாட்சியை கொண்டுவரப் போகும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களியுங்கள்.

இடி அமீனைப் போல் ஆட்சி நடத்தும் மகிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று இப்பொழுது நாட்டு மக்கள் கங்கணம் கட்டியுள்ளனர். அதற்கான சிறந்த சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தற்போது தபால் மூல வாக்களிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. அதில் அதிகமான அரசாங்க ஊழியர்கள் எனக்கே வாக்களித்துள்ளனர் என மொனராகலையில் நடந்த கூட்டத்தில் பொது வேட்ப்பாளர் மைத்திரி தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கையில் உள்ள அனைவரும் ஆட்சி மாற்றம் ஒன்றையே விரும்புகின்றனர். அதனாலேயே இன்று இந்த கருத்தை முன் வைக்கின்றேன்.தேர்தலிலும் எனது வெற்றி உறுதி என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment