– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) ஏற்பாட்டில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்று நாளை பி.ப.2.00 மணிக்கு காத்தான்குடி பிரதான வீதி மற்றும் கபுரை வீதிச் சந்தியில் இடம்பெறவுள்ளது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படிப் பொதுக்கூட்டத்தில் அனைத்துப் பொது மக்களையும் கலந்துகொள்ளுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அன்புடன் அழைக்கின்றது.

Leave a comment