எதிர்வரும் 19 திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடி விஜயம்

ground (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: எதிர்வரும் 19-12-2014 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி ரெலிகோம் வீதியில் நிறுவப்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் விஜயம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவிக்கையில்,

ground (2)

19-12-2014 வெள்ளிக்கிழமை காத்தான்குடி விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதே வேளை ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பில் 14-12-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு ஜனாதிபதி விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.

ground

இவ் விஜயத்தில், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , நகர சபை உறுப்பினர் அலி சப்ரி, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ. நாஸர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Published by

One response to “எதிர்வரும் 19 திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடி விஜயம்”

  1. Kattankudy vote mahinda Kku thaan summa sollurathu my3 entru aiyo aiyo

Leave a comment