கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அஸ்வர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதங்களின் போதுகூட ஜனாதிபதியை விட்டுக்கொடுக்காமலும், மற்றும் பாராளுமன்ற அமர்வுகளில் தனது கவிதைகளாலும் ஜனாதிபதியை புகழ்பாடி காப்பாற்றிவந்த அஸ்வர் ஹாஜியாரின் ராஜினாமாவில் பல மர்மங்கள் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
Published by

Leave a comment