மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை: வெள்ளத்தில் மூழ்கிய காத்தான்குடி வீதிகள்!

flood 2014– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கடும் மழையுடன் கடல் கொந்தளிப்பும் காணப்படுவதுடன் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு மீனவர்கள் செல்லாத காரணத்தால் மீன்களுக்கு அதிகம் தட்டுப்பாடு நிலவுவதுடன் மீன்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன.

flood 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி , காத்தான்குடி,  புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், கர்பலா, பாலமுனை, கிரான்,  கல்லாறு,  பெரிய கல்லாறு, துறைநீலாவணை ,களுவாஞ்சிக்குடி , பட்டிப்பளை, வவுனதீவு ஓள்ளிக்குளம் , மண்முனை, சிகரம், காங்கேயனோடை,  புல்லுமலை, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை, நாவலடி, வாகரை உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

flood 2014

இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்யும் தொழிலாளிகளும் பெரிதும் அவஸ்தைப் படுகின்றனர்.

தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் ஆறு, கடல், குளம் மற்றும் கிணறு , நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

flood 2014

Published by

Leave a comment