கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
பனார்: கத்தாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்தியப் பேச்சாளர் அஷ்ஷெய்க் மௌலவி அப்துல் பாஸித் புகாரியின் விசேட மார்க்க சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் 14/11/2014 நாளை வெள்ளிக்கிழமை கத்தார் அப்துல்லாஹ் பின் ஸைத் அரங்கில் (பனார்) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.சீ.என் முஹம்மத் (அப்பாஸி) தெரிவித்தார்.
من هم الغرباء؟ ”யார் அந்த குரபாக்கள்”? எனும் தலைப்பில் மாலை 07.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதில் கடல்கடந்து வாழும் எமது தமிழ்பேசும் சகோததரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் அன்போடு அழைப்பு விடுக்கின்றது.
இந்நிகழ்வில் பெண்களுக்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment