காலி: இன்ஷா அல்லாஹ் 2015 ஜனவரிமாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்காக மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவிஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவுஎன்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
பின்வரும் தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்:
சரீஆப் பிரிவு:
15 வயதுக்குட்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்விகற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்கள்
அல்குர்ஆன் மனனப் பிரிவு:
11-13 வயதுக்கிடைப்பட்டஅல்குர்ஆனைச் சரளமாகஓதத் தெரிந்த தற்பொழுது பாடசாலையில் குறைந்தது 6 ம் ஆண்டில் கல்விகற்பவர்கள்.
விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர், வயது, கல்வித் தரம்,சேரவிரும்பும் பகுதி விலாசம், தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பனபற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும்.
குறிப்பு :
• இங்கு சரீஆப்பிரிவு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் அவர்கள் க. பொ. த. சா/த, உ/த. பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றனர்.
• விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பமுடிவு: 30-11-2014ம். திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கவேண்டியமுகவரி :
அதிபர்,
இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரி,
த. பெ. இல: 105,
இல.: 50, ஹிரிம்புரகுறுக்குவீதி,
காலி
தொ. பே. இல. : 0912243672/ 077 7921418
Published by

Leave a comment