பக்தாத்: மேற்கு ஈராக்கின் அல் பாக்கிர் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தினர், மோதல்களின் போது தங்களுக்கு எதிராகச் செயற்பட்டனர் என்ற குற்றத்திற்காக 30 ஈராக்கிய ஆண்கள் அணிவகுக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களுள் ஈராக்கின் இராணுவத்தினரும் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், அனைவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் பின்புறமாக ஐ.எஸ். இயக்கத்தினரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக நேரில் பார்த்த அல்பாக்கிர் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
Published by


Leave a comment