பள்ளிவாயல்கள் கதீப்மார்கள் இமாம்கள் சம்மேளனத்தின் முஹர்ரம் நிகழ்வு 2014

-டீன் பைரூஸ்-

OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி:காத்தான்குடி பள்ளிவாயல்கள், கதீப்மார்கள், இமாம்கள் சம்மேளனத்தின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு புதிய காத்தான்குடி அன்வர் மஸ்ஜித் இல் (கடலோரக்காற்றில்) மேற்படி நிகழ்வு இடம் பெற உள்ளதாக சம்மேளனத்தின் செயளாலர் மௌலவி அல்ஹாஜ் SMM முஸ்தபா (பலாஹி) JP தெரிவித்தார்.

இன்று (25.10.2014 சனிக்கிழமை) இரவு 08.00 மணிக்கு ஆரம்பமாக உள்ள மேற்படி நிகழ்வில் சுமார் 150 க்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும்  தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார்கள் இமாம்கள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களாக உள்ள இமாம்கள், முஅத்தின்களின் பிள்ளைகளில் சிலர் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது  விசேட அம்சமாகும்.

 

 

Published by

Leave a comment