ஜமாலியா இளைஞர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு

trinco jamaliya– பஹ்மி யூஸூப்

திருகோணமலை: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 26வது தேசிய விளையாட்டு விழா – 2014 இன் உதைப்பந்தாட்டப் போட்டியில் திருகோணமலை மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடம் பெற்ற ஜமாலியா இளைஞர் விளையாட்டுக் கழகம் திருகோணமலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் ஏ.ஹமீர் அவர்களின் வழிகாட்டலில் திருகோணமலை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.எல்.அலாவுதீன்

பாபு அவர்களின் தலைமையில் சென்று ஒக்டோபர் மாதம் 11, 12ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற போட்டிகளில் குருநாகல் 02 : 00, வவுனியா 02 : 00, யாழ்ப்பாணம் 02 : 01, அம்பாறை 02 : 00 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று நவம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை பெலியத்த விளையாட்டு அரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு தெரிவாகயுள்ளது.

trinco jamaliya

Published by

Leave a comment