காத்தான்குடி: கடந்த கால யுத்தத்தின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சம்பந்தமான விபரங்களை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கும் முகமாக கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) காலத்திற்குட்பட்ட மனித
உரிமை மீறல்கள் சம்பந்தமான ஆவணம் ஒன்றினை நேரடியாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு இம்மாதம் 28 ஆம் திகதிற்கு முன்பாக தகவல்களை திரட்டி அனுப்ப வேண்டி இருப்பதால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் 2011 நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையிலான காலப்குதிக்குள் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் சம்பவத்தினை சேகரித்து அனுப்பும் முகமாக இக்கால கட்டத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களினது தகவல்கள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தகவல் சேகரிப்பு படிவத்தினை நேரடியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களின் காரியாலயத்தில் பெற்று மிக விரைவாக பூரணப்படுத்தி சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வண்ணம்
பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
(கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
Published by

Leave a comment